கை கூ கவிதை


அரும்புகள் எல்லாம் பூக்கள் விற்பதால் மல்லிகைபூவிலும் வியர்வை வாசம்
பிஞ்சு விரல்கள் பிழிந்ததனாலே கசப்பாய் இருக்கிறது கரும்புச்சாறு
கடற்கரை அலையை ரசிக்கமுடியவில்லை, நொண்டிச்சிறுவன் சுண்டல் விற்கயிலே
பெற்றோர் இருவரும் வேலைக்கு போக வாடகைத்தாய்யாக
9 வயதுச்சிறுமி

வாடாத கீரையை வாடிய முகத்தோடு விற்கிறால் சிறுமி, வாங்கிச்சமைத்தபின் உப்பின் கரிப்பு உறைப்பாய் எனக்கு
அப்பா வாங்கியது அதிகவிலை: அக்காவின் கணவன்
வாகனம் ஓட்டும் போது கைதொலைபேசி ஒலித்தால் எடுத்துப்பேசாதீர்கள், அலைப்பது எமனாகக்கூட இருக்கலாம்.
கடல் அலையை ரசிக்கமுடியவில்லை, சுனாமிப்பேரலை வந்து போன பின்னால்

Leave a comment


Counter