Mai, 2010

ஓளவையின் பாடல்

ஆலைப் பலா ஆக்கலாமோ?
அருஞ்சுணங்கள் வாலை நிமிர்க்க வசமோ?
நீலநிறக் காக்கைதனை பேசுவிக்கலாமோ
கருனையிலா மூர்க்கனை சீராக்கலாமோ?

அகதியாரின் பாடல்

வட்டியில்லா கடன் எடுக்க முடியுமோ?
கழிவில்லா சீட்டுப்பிடிக்க முடியுமோ?
மொய் கொடுக்கா விழா காண முடியுமோ?
குழப்பமில்லா விழா பார்க்க முடியுமோ?
நாடகமில்லா சின்னத்திரை இருக்க முடியுமோ?
சினிமாபாடல் இல்லா வானொலி கேட்க முடியுமோ?

ரொக்கம் இல்லா ஊடகம் தொடர முடியுமோ?
அன்னதானம் இல்லா ஆலயத்தில் பக்த்தரை காணத்தான் முடியுமோ?

கடன் கொடுக்கமால் கடை நடாத்த முடியுமோ?
கோலா கலக்கா விஸ்கி குடிக்கத்தான் முடியுமோ?
குறை கூறா உறவை தேடத்தான் முடியுமோ?
நம்பிக் கெடுக்கா நட்பை தேடத்தான் முடியுமோ?
நகை போடா பெண்ணை காணத்தான் முடியுமோ?
இரண்டு வேலை செய்யா எம்மவரை தேடத்தான் முடியுமோ?
எம்மவர் ஆக்கத்தை விலைக்கு விற்க்கத்தான் முடியுமோ?
புலம் பெயரா தமிழ்ர் இருக்கத்தான் முடியுமோ?
நம்மினத்தார் ஒற்றுமையாய் வாழத்தான் முடியுமோ?
அலுப்புத்தராத மனைவி அமையத்தான் முடியுமோ?
தன் பிள்ளையை புழுகாத தாயைத்தான் காணமுடியுமோ?
முடியுமோ முடியுமோ எமக்கு இவையெல்லாம் புலம்பெயர்வில்
முடியுமோ முடியுமோ முடியுமோ?

(தி.மு) திருமணத்திற்கு முன்

(நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்

அவன் : ஆமாம்இ இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

அவள்   : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன்   : இல்லைஇ இல்லைஇ நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள்    : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன்    : ஆமாம்இ இன்றும்இ என்றென்றும்

அவள்     : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன்     : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள்     : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன்     : கண்டிப்பாகஇ அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள்     : என்னை திட்டுவாயா ?

அவன்     : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா

அவள்    : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின்

கீழிருந்து மேலே படியுங்கள்

பார்த்ததில் பிடித்தது


புலம்பெயர் வாழ்வே புண்ணானதால் பூத்த பொன்மொழிகள்

controverseஎதிரி நண்பன் ஆனால் ஆபத்து
நண்பன் எதிரி ஆனால் பேராபத்து

நல்ல நட்பு தூர இருந்தாலும் கிட்ட இருப்பது போல் இருக்கும்
கெட்ட நட்பு கிட்ட இருந்தாலும் தூர இருப்பது போல் இருக்கும்

வேலையின்றி வாழ்ந்த போது சேர்ந்த நட்பு
வேலை கிடைத்தபின் சோர்ந்த நட்பு

சொல்பவர்கள் எல்லாம், செய்பவர்கள் அல்ல
செய்பவர்கள் எல்லாம் சொல்பவர்கள் அல்ல.
சொல்லி விட்டு சொல்லவில்லை எனபவர்கள் நல்லவர்கள் அல்ல

படித்ததில் பிடித்தது


நேரு சொன்னார்:
சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி..

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..

இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா???…
இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா???

——————————————————————————————————————–
நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!

——————————————————————————————————————–
ஒன்றுமே தெரியாத student கிட்ட question paper கொடுக்குறாங்க….
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட answer paper கொடுக்குறாங்க…
என்ன கொடும சார் இது????….

——————————————————————————————————————–
ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப்
புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது…

——————————————————————————————————————–
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான் ஐயா.
——————————————————————————————————————–
நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…
சொல்லட்டுமா????
ஆ..சொல்லட்டுமா????

பக்கத்து “பெருமாள் கோவில்”ல சுண்டல் போடுறாங்க…
ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….


Counter