April, 2010

பனங்காய் பணியாரம்

புலம் பெயர்ந்தவர் நாங்களடா


புலம் பெயர்ந்தவர் நாங்களடா
இங்கு புலம்பி வாழ்வதும் நாங்களடா
மனம் விட்டு கதைப்பவாள் இல்லையடா – இங்கு
போக விட்டு சிரிப்பவர் தொல்லையடா

இருக்கும் போது சிரிக்கின்றார்
இல்லையென்றால் அழுகின்றார்
ஓடி ஓடி உழைக்கின்றார்
உண்மைகள் தன்னை மறைக்கின்றார்

தன்னைத் தானே புகழ்கின்றார்
பகட்டு வாழ்கை வாழ்கின்றார்
உறவுகள் தன்னை மறக்கின்றார்
நாடுகள் மாறி அலைகின்றார்

படித்தவன் போலே நடிக்கின்றார்
படைத்தவர் போலே வாழ்கின்றார்
கொடுத்தவான் கேட்டால் முறைக்கின்றார்
பண்பற்ற கதைகள் கதைக்கின்றார்

படைத்ததை எல்லாம் அழிக்கின்றார்
படித்ததை எல்லாம் கிழிக்கின்றார்
சிந்தனனை இன்றி முழிக்கின்றார்
தாய் மொழி தன்னை மறக்கின்றார்

——
தனக்காக வாழ்ந்தால் நேரம் போகாது
பிறருக்காக வாழ்ந்தால் நேரம் போதாது

தத்துவ வரிகள்

கிராமத்து பெண்ணின் முகத்தில் புன்நகை
நகரத்து பெண்ணின் கழுத்தில் நகை

சேற்றில் நின்று நாற்று நடும்
கிராமத்து பெண்களின் பாட்டில் சேறில்லை

பசுவின் மடியில் கொசு கடித்தாலும் அது குடிப்பது பாலையல்ல
அதன் இரத்தத்தை

கோவிலில்லா ஊரில் குடியிருக்காதே
குடியிருக்கும் இடத்தில் அல்லவா கோவில் இருக்கிறது

நிலத்தில் வாழ் நம்மவர் முகத்தில் அவலங்கள்
புலத்தில் வாழ் எம்மவர் முகத்தில் அலங்காரங்கள்

நான் சிரித்த போது சிரிக்காத நட்புக்கள்
நான் அழுத போது சிரிக்கின்றது


அப்பவும் இப்பவும்

சோமண்ணை: தமிழ் ரேடியோ, தமிழ் ரீவீ பார்க்கக் கேக்க முடியவில்லை
ஏனென்றால் வாடகை வீட்டில் சட்லைட் பூட்டமுடியாது

கந்தப்பு: இப்ப நிலத்தோடு வீடு கட்டி சட்லைட் பூட்டியும் ரேடியோ,
ரீவீ பார்க்கக் கேக்க முடியவில்லை, வீட்டு கடன் அடைக்க ஓடியோடி
இரண்டு வேலை செய்வதால். பார்க்க கேக்க நேரமில்லை

சோமண்ணை: !?!??!?


Counter