Posted in சிரித்து சிந்தியுங்கள் on 03/28/2010 05:08 pm by Ravi Chellathuray
பெயரில் நேசம் = செயலில் மோசம்
நேசப்பார்வை அது மோசப்பார்வை
நேசக்கரம் அது மோசக்கரம்
நேச நாடு அது மோசநாடு
—————-
சோமண்ணை: கோவிலில் களவு போய்விட்டது என்று கேள்விப்பட்டவுடன்
கோவில் தர்மகத்தா பெரிய சந்தோஷத்தில் இருக்கிறார்.
கந்தப்பு: கவைலைப்படாமல் ஏன் சந்தோஷப்படுகிறார்?
சோமண்ணை: தான் அடிச்சதும், திருடன்பெயரில் போட்டாச்சு என்று தான்
கந்தப்பு: !?!?!?
——————
கந்தப்பு: திருட்டுச்சின்னத்துரை ஆன்மீகவாதியாக மாறிவிட்டான்
சோமண்ணை: எதை வைச்சு அப்படி சொல்லுகிறாய்?
கந்தப்பு: இப்ப கோவிலில் மட்டும் தான் திருடுகிறான்
சோமண்ணை: !?!?!?!
———-
கூட்டு – சீட்டு
நிலத்தில் வாழந்த போது கூட்டுக்குடும்பம்
புலத்தில் வாழும்போது சீட்டுக்குடும்பம்
கூறல்சீட்டில் கழிவு அதிகம்
நகைச்சீட்டில் சேதாரம் அதிகம்
Posted in கவிதைகள் on 03/23/2010 07:50 am by Ravi Chellathuray

நம்மவர் கண்ணுக்கு நல்லவைகள் தெரியாது
எம்மவர் மனதுக்கு நன்மைகள் புரியாது
அவரவர் முகங்களிலே புன்னகையே கிடையாது
அந்தந்த சிரிப்புக்கு அர்த்தமே புரியாது
பேசுகின்ற வார்த்தையிலே விபரங்கள் இருக்காது
தாயகத்து நிகழ்வுகளில் நாட்டமே கிடையாது
எம்மவரின் பண்பாடு நம்மவர்க்கே புரியாது
எமக்குள்ள வேற்றுமைகள் ஒருபோதும் ஒழியாது
போகவிட்டு புறஞ்சொல்லல் ஒருநாளும் போகாது
ஓரிடத்தில் ஒழுங்காக வாழ்ந்ததுவும் கிடையாது
வந்தவரை வரவேற்க்கும் பண்புதனும் கிடையாது
பணம்சேர்க்கும் படலங்கள் நம்மைவிட்டு போகாது
பலகோடி கொடுத்தாலும் அதுகூடப் போகாது
நன்மை பல செய்தாலும் நன்றியே கிடையாது
தாய்மொழியை பேசுகின்ற நோக்கமே வராது
பொதுநலம் என்னவென்று ஒருவருக்கும் தெரியாது
எம்மினத்தை விட்டுவிட்டு இக்குணங்கள் மாறாது
மாறாது மாறாது ஒருபோதும் மாறாது
எம்மினம் என்னவென்று எம்மவர்கே புரியாது
தெரியாது, புரியாது இதுவொன்றும் மாறாது
மாறாது மாறாது என்றென்றும் மாறாது
சுடுகாடு போனாலும் சுட்டெரிந்து போனாலும்
இக்குணங்கள் எம்மைவிட்டு ஒருபோதும் மாறாது
மாறாது மாறாது ஒருபோதும் மாறாது
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 03/16/2010 07:55 am by Ravi Chellathuray
கந்தப்பு: வர, வர உடம்பு வீக்காய் போச்சு
சோமண்ணை: ஏன்?
கந்தப்பு: முன்பு ஒரு போத்தல் விஸ்கி
குடித்தாலும் அசையமாட்டன்
சோமண்ணை: அப்ப இப்ப?
கந்தப்பு: வெறும் விஸ்கி போத்தலை
கண்டவுடனேயே ஆட்டம் துவங்கி விடுகிது
சோமண்ணை: !?!?!?
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 03/09/2010 08:02 am by Ravi Chellathuray

கந்தப்பு: இப்படி தெரிஞ்சிருந்தா,
அந்த கோவிலுக்கு போயிருக்க மாட்டன்
சோமண்ணை: ஏன் கோவில் பூட்டோ?
கந்தப்பு: அட நீ வேற அங்க இருந்த
தெல்லாம் பழய செருப்பும், சப்பாத்தும் தான்
சோமண்ணை: !?!?!?
———————–
சோமண்ணை: அடிக்கடி கோவிலுக்கு போய் வாரவரிடம்
தானத்தில் சிறந்த தானம் எது என்று கேட்டது தப்பா போச்சு!
கந்தப்பு: ஏன் என்ன சொல்கிறார்?
சோமண்ணை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறார்
கந்தப்பு: !?!?!?
————————
கோவில் வந்ததும் உண்டியல் வந்ததா?
உண்டியல் வந்ததும் கோவில் வந்ததா?
அம்மன் எழுந்து ஓடியது
போலிச் சாமியாரை கண்டபோது
————————