சிரித்து சிந்தியுங்கள்
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 02/08/2010 08:05 am by Ravi Chellathuray
சோமண்ணை: போன மாதம் உன்ற மகளுக்கு
கல்யாணம் நடந்திருக்கு, எனக்கு சொல்லவேயில்லை!
கந்தப்பு: அவள் எனக்கே சொல்லவில்லையே!
சோமண்ணை: !?!?!?!?
——————————————————————————–
சோமண்ணை: கலியாண மண்டபத்துக்கு
பொம்பிளை ஏன் லேட்?
கந்தப்பு: தலைமுடிக்கு டை போட்டு
முடித்து வர லேட்டா போச்சு!
சோமண்ணை: !?!?!?
——————————————————————————-
சோமண்ணை: சுந்தரத்தான் தன்ற மகன் சிக்ரட் குடிக்கிறான்
என்று கவலைப்பட்டு கதைத்தவன்.
கந்தப்பு: மகன் சிக்ரட் குடிக்கிறதை கண்டால்
தகப்பனுக்கு கவலை தானே வரும்!
சோமண்ணை: சிக்ரட் குடிக்கிறத்துக்கு
கவலைப் படவில்லை! தன்ற சிக்ரட்டை
களவெடுத்து குடிக்கிறான் என்ட கவலையாம்
கந்தப்பு: !?!?!?!?


