Posted in கவிதைகள், தத்துவ வரிகள் on 01/25/2010 01:00 am by Ravi Chellathuray

கடனாலே வந்த நட்பு வட்டியாலே போகும்
சீட்டாலே வந்த நட்பு கழிவோடு போகும்
விழாவாலே வந்த நட்பு மொய்யோடு போகும்
ஆலயத்தில் வந்த நட்பு அன்னதானத்தோடு போகும்
குடியாலே வந்த நட்பு வெறியோடு போகும்
கடையாலே வந்த நட்பு கடனாலே போகும்
உறவாலே வந்த நட்பு அலுப்பாலே போகும்
பயணத்தால் வந்த நட்பு பாதியிலே போகும்
இனையத்தில் வந்த நட்பு வைரஸால் போகும்
அறிவிப்பாளரோடு வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்
ரெலிபோனால் வந்த நட்பு கார்ட் வெட்டோடு போகும்
போகும் பொய்யான நட்ப்பெல்லாம் பாதியிலே பொய்யாகி போகும்
———————
நம்பி கெடுப்பவனுடன் நட்பாய் இருப்பதை விட
நம்பாமல் இருப்பவனின் நட்பு மேல்
கட்டின மாடு எட்டும் வரை மேயும்
கட்டாத மாடு ஓயும் வரை மேயும்
இழுக்கும் வரை மேய்வது கட்டின மாடு
இருக்கும் வரை மேய்வது கட்டாமாடு
Posted in தெருக்குறள் on 01/19/2010 07:55 am by Ravi Chellathuray



முகத்தாலே வந்த நட்பு முள்போல குத்தும்
அகத்தாலே வந்த நட்பு பூபோல மலரும்
முகத்தாலே வந்த நட்பு வாங்கும் வரை நிற்க்கும்
அகத்தாலே வந்த நட்பு வாழும் வரை தொடரும்
அந்நியரை கண்ட போது நான் அகதி என்கிறான்
நம்மவரை கண்ட போது தான் நஷநாலிற்றி என்கிறான்
சோஸலுக்கு போகும் போது கால் நடையாய் போகின்றான்
கொவிலுக்கு போகும் போது கார்பயணம் செய்கின்றான்
வாழும் நாட்டில் இருந்தால் பிச்சாதிபதி
வாழ்ந்த நாட்டுக்கு போனால் லட்சாதிபதி
Posted in சிரித்து சிந்தியுங்கள், பித்தளைச்சிப்பி on 01/11/2010 08:15 am by Ravi Chellathuray

சோமு: ஊரில கொட்டில் வீட்டில இருந்த சின்னத்துரையன் ஐரோப்பாவுக்கு
வந்து காணி வாங்கி வீடுகட்டி குடி புகுந்திட்டானாம்! கேள்விப்பட்டனியே!
கந்தப்பு: ஓம், ஓம் கேள்விப்பட்டனான், அதோட வேற பிளானும் இருக்காம்.
சோமு: வேற என்ன பிளானாம்?
கந்தப்பு: வாங்கின வழவுக்க கிணறும் வெட்டி, பின் வழவுக்க கக்கூஸ்
கட்ட போறானாம். அதோட வேற பிளானும் ஒண்டு இருக்காம்.
சோமு: அது என்ன வேற பிளான்?
கந்தப்பு: ஊரில் இருந்த பனை ஓலை இறக்கி வழவுக்கு வேலி
அடைக்கப் போறானாம்.
சோமு: பிளான் இல்லாம வெளிகிட்டு இப்ப நல்ல பிளானாத் தான்
இருக்கிறான் எண்டு சொல்லுறாய்.
——————————————————
PLAN போட்டு வாழ்வாரே வாழவார், மற்றெல்லாம்
PLAN இன்றி பின் நின்று கதைப்பார்
கட்டிய வீட்டுக்கு இட்ட பெயர் அன்னை இல்லம்
அன்னை இருக்கும் இடமோ அகதி இல்லம்