Dezember, 2009
நன்று நன்றன்று
Posted in தெருக்குறள் on 12/28/2009 01:00 am by Ravi Chellathuray
பாராட்டி பேசுதல் நன்று – பாராட்டியபின்
பாராட்டியவரே பாராட்டியவரை திட்டித்திரிவது நன்றன்று
திட்டித்திரிதல் நன்றன்று திட்டியபின் திட்டியவரே
திட்டியவரோடு சேர்ந்து திரிதல் நன்றன்று
மொய் கொடுத்தல் நன்று – கொடுத்தபின்
மொய்க்காக விழா எடுத்தல் நன்றன்று
கொடுத்தோரை வாழ்த்துவது நன்று
வாங்கியபின் கொடுத்தோரை ஏய்த்து திரிவது நன்றன்று
ஆக்கம் இல்லையேல் நிகழ்ச்சி இல்லை அஃது போல்
ரொக்க இல்லையேல் ஊடகம் இல்லை
படி, படி படிப்பதை படிக்க படித்தபின்
படித்தபடி நடக்க அதற்கு தக
உழைக்க உழைக்க உடல்வலுவுக்கு ஏற்ப உழைக்க – அஃது போல்
செலவு செய்க வரவுக்கு ஏற்ப்ப
வரவுக்கு ஏற்ற வாழ்கை வாழ்வாரே வாழ்வார் அஃதிலார்
வரவிழந்து மனம் நொந்து வீழ்வார்
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 12/07/2009 09:50 am by Ravi Chellathuray
சோமண்ணை: ஒழுங்காய் நடக்கிற பள்ளிக்கூடம்
கோவில் மன்றங்களை பிரிச்சுப்போட்டு சிரிச்சிக்-
கொண்டு திரிஞ்சவங்கள் இப்ப ஏன் கவலையால்
அழுதுகொண்டு திரியுறாங்கள்?
கந்தப்பு: பிரிஞ்சதெல்லாம் ஒன்று சேர்ந்திடுமோ
என்ட பயத்தில் தான்!
சோமண்ணை:?!?!?!?
———————————————————————————————————————————————————————-
சோமண்ணை: மணியத்தானிண்ட கடைக்கு
முன்னாலே
கன சனம் நிற்குது. நல்ல வியாபரம்
நடக்குது போலயிருக்கு.
கந்தப்பு: சாமன் வாங்க நிக்கேல்ல!
சோமண்ணை: அப்ப ஏன் நிக்கினம்?
கந்தப்பு: மணியத்தானிட்ட குடுத்த கடனை
வாங்கத்தான்
சோமண்ணை: ?!?!?!?

