September, 2009
“/” = பிரித்தல்
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 09/21/2009 10:55 am by Ravi Chellathuray
கந்தப்பு: இவன் மணியத்தான் பள்ளிக்கூடத்தில படிக்கேக்க பிரித்தல் கணக்கு, பிரித்து எழுதுதல் போன்ற பாடங்களில் வலுகெட்டிக்காறன்.
சோமண்ணை: அது அவன்ற செயல்பாட்டில் தெரியுதுதானே!
கந்தப்பு: எப்படி?
சோமண்ணை: ஒழுங்காய் நடக்கிற எல்லாத்தையும் பிரிச்சுக்கொண்டு திரிகிறான், அதிலிருந்து புரியிதுதானே!
கந்தப்பு:!?!?!?!?!
நிலவும் வானும் போல, மலரும் மணமும் போல
Posted in தத்துவ வரிகள் on 09/16/2009 10:50 am by Ravi Chellathurayசீட்டும் கழிவும் போல
மொய்யும் விழாவும் போல
அன்னதானமும் கோவிலும் போல
வட்டியும் கடனும் போல
சின்னத்திரையும் சீரியலும் போல
விஸ்கியும் கோலாவும் போல
மாணவரும் Tuitonம் போல
டான்சும் அரங்கேற்றமும் போல
கடையும் சேல்சும் போல
டெலிபோன் Cardஉம் வெட்டலும் போல
ஊடகமும் ரொக்கமும் போல
இலங்கைத் தமிழனும் அகதியும் போல
முள்வேலியும் வன்னித் தமிழனும் போல
முடியும் டையும் போல
வழுக்கையும் சீப்பும் போல
Programmம் குழப்பமும் போல
கலை விழாவும் கொத்து ரொட்டியும் போல
புலமொழியும் – பழ மொழியும்
Posted in தத்துவ வரிகள் on 09/11/2009 08:50 am by Ravi Chellathuray
பிச்சை வேண்டாம் நாயைப்பிடி
கழிவு வேண்டாம் சீட்டைப்பிடி
வட்டி வேண்டாம் முதலைப்பிடி
மொய் வேண்டாம் விழாவைப்பிடி
விடுப்புக் குறள்
Posted in தெருக்குறள் on 09/07/2009 09:50 am by Ravi Chellathuray
உறவோடு உறவாட விடுமுறைக்கு வருவார்
தாம் வாழ் தேச புகழ்பாடி தம்நாட்டுக்கு போவார்
உறவோடு உறவாடி கதைப்பார் முடிவில்
மன அழுத்தத்தை தந்தல்லோ நம்மைவிட்டு போவார்
மனதுக்குள் மன அழுத்தத்தில் இருப்பார்
கதைக்கையிலே மகிழ்ச்சி போல சிரித்தல்லோ கதைப்பார்
கடன்பட்டு விடுமுறையை கலகலப்பாய் கழிப்பார்
முடிவில் கடன் கேட்டு மன அழுத்தத்தை தருவார்
மகிழ்வுக்காய் விடுமுறைக்கு வருவார்- பின்னர்
சின்னத்திரை சினிமாவில் மூழ்கிப்போய்க்கிடப்பார்
தன் பிள்ளை புகழ் பாடி கதைப்பார்- அவர்
செய்கின்ற தவறுதலை கதையாலே மறைப்பார்
விடுமுறைக்கு விடுப்பு எடுத்து வருவார் இருக்கையிலே
பல விடுப்புக் கதை கதைப்பார்

