Dezember, 2008
பத்திரிகை ஆசிரியரின் நிலை
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 12/20/2008 11:00 pm by Ravi Chellathurayஓடுகினம், ஓடுகினம் லண்டனுக்கு ஓடுகினம்
Posted in கவிதைகள் on 12/15/2008 08:00 am by Ravi Chellathurayஓடுகினம், ஓடுகினம் லண்டனுக்கு ஓடுகினம்
புலம் பெயர்ந்து வந்த பின்பும் லண்டனுக்கு ஓடுகினம்
ஓடுகின, ஓடுகினம் குடும்பமாக ஓடுகினம்
குட்டி போட்ட பூனை போல குடும்பமாக ஓடுகினம்
ஓடுகினம், ஓடுகினம் லண்டனுக்கு ஓடுகினம்
இங்கிலீசு படிக்கலாமாம் என்று சொல்லி ஓடுகினம்
பேற்றோல்செற்றில் வேலையென்று சொல்லி சொல்லி ஓடுகினம்
வீடு அங்க வாங்கலாமாம் என்று சொல்லி ஓடுகினம்
கடைகள் அங்கு திறக்கலாமாம் என்று சொல்லி ஓடுகினம்
ஓடுகினம், ஓடுகினம் லண்டனுக்கு ஓடுகினம் Read the rest of this entry »
தமிழ் மொழி
Posted in கவிதைகள் on 12/12/2008 09:35 am by Ravi Chellathuray
தமிழ் மொழியாம் தமிழ் மொழி அது எங்கள் தாய் மொழி
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தொன்றிய
மூத்தமொழியாம் தமிழ் மொழி
உலக பொது மறையாம் திருக்குறளை இவ் உலகிற்கு
தந்த மொழியாம் தமிழ்மொழி
தமிழுக்கும் அமுதென்று பெயர் அதுவே நம்மொழியாம் தமிழ்மொழி
இயற்கை வழம்தனை காக்க சொன்ன மொழியாம் தமிழ் மொழி
நீர், நிலம், காற்று ஆகயம் நெருப்பு இவைதனை
போற்றி கவி பாடி வணங்கியதும் தாய்மொழியாம் தமிழ் மொழி
உறவுகளை இணைய வைக்க உதவும் மொழியாம் எம்மொழியாம் தமிழ் மொழி
உயிர் எழுது, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து என்று எழுத்துக்கே
உயிர் கொடுத்த மொழி தமிழ் மொழி
தமிழ் மொழியாம் தமிழ் மொழி அது எங்கள் தாய்மொழி
தமிழ் இனத்துக்கே பெருமை தேடித்தந்த மொழி தமிழ் மொழி
போற்றிடுவோம் போற்றிடுவோம் அதை போற்றி பாடிடுவோம்
தமிழ் மொழியை கவியாலே கவி பாடி நாம் இங்கு மகிழ்ந்திடுவோம்
ஒற்றுமை வேற்றுமை
Posted in தெருக்குறள் on 12/07/2008 08:00 am by Ravi Chellathuray
ஆசிரியர்: நிலத்தில் இருக்கிற தமிழ் அகதிகளுக்கும், புலத்தில் இருக்கிற
அகதிகளுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்னவென்று சொல்லுங்கோ
மாணவன்: ஒற்றுமை – அங்கும் அகதி தான், இங்கும் அகதி தான்.
வேற்றமை – நிலத்தில் அவலப்பட்ட அகதி புலத்தில் அலங்கார அகதி.
ஆசிரியர்: நிலத்தில் இருக்கிற தமிழனுக்கும் புலத்தில் இருக்கிற
தமிழனுக்கும் உள்ள பிரச்சினை என்ன?
மாணவான்: நிலத்தில் இருக்கிற தமிழருக்கு சிங்களவரால் பிரச்சினை,
புலத்தில் இருக்கிற தமிழனுக்கு தமிழனாலேயே பிரச்சினை
கொம்பியூட்டர் பிள்ளையார்
Posted in சிரித்து சிந்தியுங்கள் on 12/05/2008 10:00 am by Ravi Chellathuray
கந்தப்பு: எங்கட சுந்தரத்தான் பிள்ளையார்
கோயிலுக்கு கொம்பியூட்டர் ஒண்டு உபயம்
செய்யப்போறானாம். கோயிலுக்கு உபயம்
செய்யிறவை- வேல், மயில், குத்துவிளக்கு
திரைச்சீலைகள்தான் குடுக்கிறவை உவன்
ஏன் கொம்பியூட்டர் கொடுக்கப்போறான்
எண்டுதான் விளங்குதில்லை அண்ண…
சோமண்ணை: பிள்ளையாரிட்டதானே ‘மவுஸ்
(எலி)” இருக்கு அதுதான் கொம்பியூட்டர் உபயம்
பண்ணப் போறான் போல கிடக்கு.





