‘சிரித்து சிந்தியுங்கள்’ Category

கறுப்பு வெள்ளை

கந்தப்பு: சுந்தரதானின்ட மனிசிக்கு, இப்பவே தலைமயிர் எல்லாம் நரைச்சு
போச்சு டை அடிச்சால் இளமையாய் தெரியும்தானே.

சோமண்ணை:
டை அடிக்கிறது சுந்தரத்தானுக்கு விருப்பமில்லையாம்!

கந்தப்பு: ஏன் செலவாமோ?

சோமண்ணை: செலவும் தான், அதோட டை அடிச்ச மனிசியோட
போகேக்க தன்னை கிழவன் மாதிரி காட்டுமாம்

கந்தப்பு:!?!?!?

(தி.மு) திருமணத்திற்கு முன்

(நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்

அவன் : ஆமாம்இ இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

அவள்   : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன்   : இல்லைஇ இல்லைஇ நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள்    : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன்    : ஆமாம்இ இன்றும்இ என்றென்றும்

அவள்     : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன்     : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள்     : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன்     : கண்டிப்பாகஇ அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள்     : என்னை திட்டுவாயா ?

அவன்     : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா

அவள்    : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின்

கீழிருந்து மேலே படியுங்கள்

படித்ததில் பிடித்தது


நேரு சொன்னார்:
சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி..

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..

இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா???…
இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா???

——————————————————————————————————————–
நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!

——————————————————————————————————————–
ஒன்றுமே தெரியாத student கிட்ட question paper கொடுக்குறாங்க….
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட answer paper கொடுக்குறாங்க…
என்ன கொடும சார் இது????….

——————————————————————————————————————–
ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப்
புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது…

——————————————————————————————————————–
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க சார்.

ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான் ஐயா.
——————————————————————————————————————–
நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…
சொல்லட்டுமா????
ஆ..சொல்லட்டுமா????

பக்கத்து “பெருமாள் கோவில்”ல சுண்டல் போடுறாங்க…
ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….

பெயரில் நேசம் = செயலில் மோசம்
நேசப்பார்வை அது மோசப்பார்வை
நேசக்கரம் அது மோசக்கரம்
நேச நாடு அது மோசநாடு

—————-

சோமண்ணை: கோவிலில் களவு போய்விட்டது என்று கேள்விப்பட்டவுடன்
கோவில் தர்மகத்தா பெரிய சந்தோஷத்தில் இருக்கிறார்.

கந்தப்பு: கவைலைப்படாமல் ஏன் சந்தோஷப்படுகிறார்?

சோமண்ணை: தான் அடிச்சதும், திருடன்பெயரில் போட்டாச்சு என்று தான்

கந்தப்பு: !?!?!?

——————

கந்தப்பு: திருட்டுச்சின்னத்துரை ஆன்மீகவாதியாக மாறிவிட்டான்

சோமண்ணை: எதை வைச்சு அப்படி சொல்லுகிறாய்?

கந்தப்பு: இப்ப கோவிலில் மட்டும் தான் திருடுகிறான்

சோமண்ணை: !?!?!?!

———-
கூட்டு – சீட்டு

நிலத்தில் வாழந்த போது கூட்டுக்குடும்பம்
புலத்தில் வாழும்போது சீட்டுக்குடும்பம்
கூறல்சீட்டில் கழிவு அதிகம்
நகைச்சீட்டில் சேதாரம் அதிகம்

விஸ்கி

drunkenகந்தப்பு: வர, வர உடம்பு வீக்காய் போச்சு

சோமண்ணை: ஏன்?

கந்தப்பு: முன்பு ஒரு போத்தல் விஸ்கி
குடித்தாலும் அசையமாட்டன்

சோமண்ணை: அப்ப இப்ப?

கந்தப்பு: வெறும் விஸ்கி போத்தலை
கண்டவுடனேயே ஆட்டம் துவங்கி விடுகிது

சோமண்ணை: !?!?!?

கோவில்

Temple
கந்தப்பு:
இப்படி தெரிஞ்சிருந்தா,
அந்த கோவிலுக்கு போயிருக்க மாட்டன்

சோமண்ணை:
ஏன்
கோவில் பூட்டோ?

கந்தப்பு: அட நீ வேற அங்க இருந்த
தெல்லாம் பழய செருப்பும், சப்பாத்தும் தான்

சோமண்ணை:
!?!?!?

———————–

சோமண்ணை: அடிக்கடி கோவிலுக்கு போய் வாரவரிடம்
தானத்தில் சிறந்த தானம் எது என்று கேட்டது தப்பா போச்சு!

கந்தப்பு: ஏன் என்ன சொல்கிறார்?

சோமண்ணை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறார்

கந்தப்பு: !?!?!?

————————

கோவில் வந்ததும் உண்டியல் வந்ததா?
உண்டியல் வந்ததும் கோவில் வந்ததா?

அம்மன் எழுந்து ஓடியது
போலிச் சாமியாரை கண்டபோது

————————

14.02.2010 காதலர் தினம்

coupleராமு: அன்பே மாலா நான் உன்னை காதலிக்கிறேன்
உடனே பதில் சொல்?

மாலா: ஏன் அவசரப்படுகிரீர்கள்?

ராமு: நீ இல்லையென்று சொன்னால் உடனே
விமலாவிடம் கேட்க்க வேண்டும்

மாலா: ?!?!?!?

———–

•    காதல் கொண்ட நாய் கூட கவிதை பாட ஊளையிடும்
•    காதல் வந்தால் கழுதையும் கவி பாடும்
•    காதல் கொண்டால் மடையர்கள் விவேகிகள் ஆகுவார்கள்
விவேகிகள் மடையர்கள் ஆக்கப்படுவார்கள்

running dog

சிரித்து சிந்தியுங்கள்

Hochzeitசோமண்ணை: போன மாதம் உன்ற மகளுக்கு
கல்யாணம் நடந்திருக்கு, எனக்கு சொல்லவேயில்லை!

கந்தப்பு: அவள் எனக்கே சொல்லவில்லையே!

சோமண்ணை: !?!?!?!?

——————————————————————————–

சோமண்ணை: கலியாண மண்டபத்துக்கு
பொம்பிளை ஏன் லேட்?

கந்தப்பு: தலைமுடிக்கு டை போட்டு
முடித்து வர லேட்டா போச்சு!

சோமண்ணை: !?!?!?

——————————————————————————-

சோமண்ணை: சுந்தரத்தான் தன்ற மகன் சிக்ரட் குடிக்கிறான்
என்று கவலைப்பட்டு கதைத்தவன்.

கந்தப்பு: மகன் சிக்ரட் குடிக்கிறதை கண்டால்
தகப்பனுக்கு கவலை தானே வரும்!

சோமண்ணை: சிக்ரட் குடிக்கிறத்துக்கு
கவலைப் படவில்லை! தன்ற சிக்ரட்டை
களவெடுத்து குடிக்கிறான் என்ட கவலையாம்

கந்தப்பு: !?!?!?!?

Zigi

PLAN இல்லா PLAN

சோமு: ஊரில கொட்டில் வீட்டில இருந்த சின்னத்துரையன் ஐரோப்பாவுக்கு
வந்து காணி வாங்கி வீடுகட்டி குடி புகுந்திட்டானாம்! கேள்விப்பட்டனியே!

கந்தப்பு: ஓம், ஓம் கேள்விப்பட்டனான், அதோட வேற பிளானும் இருக்காம்.

சோமு: வேற என்ன பிளானாம்?

கந்தப்பு: வாங்கின வழவுக்க கிணறும் வெட்டி, பின் வழவுக்க கக்கூஸ்
கட்ட போறானாம். அதோட வேற பிளானும் ஒண்டு இருக்காம்.

சோமு: அது என்ன வேற பிளான்?

கந்தப்பு: ஊரில் இருந்த பனை ஓலை இறக்கி வழவுக்கு வேலி
அடைக்கப் போறானாம்.

சோமு: பிளான் இல்லாம வெளிகிட்டு இப்ப நல்ல பிளானாத் தான்
இருக்கிறான் எண்டு சொல்லுறாய்.

——————————————————

PLAN போட்டு வாழ்வாரே வாழவார், மற்றெல்லாம்
PLAN இன்றி பின் நின்று கதைப்பார்

கட்டிய வீட்டுக்கு இட்ட பெயர் அன்னை இல்லம்
அன்னை இருக்கும் இடமோ அகதி இல்லம்

சோமண்ணை: ஒழுங்காய் நடக்கிற பள்ளிக்கூடம்
கோவில் மன்றங்களை பிரிச்சுப்போட்டு சிரிச்சிக்-
கொண்டு திரிஞ்சவங்கள் இப்ப ஏன் கவலையால்
அழுதுகொண்டு திரியுறாங்கள்?

கந்தப்பு: பிரிஞ்சதெல்லாம் ஒன்று சேர்ந்திடுமோ
என்ட பயத்தில் தான்!

சோமண்ணை:?!?!?!?

———————————————————————————————————————————————————————-
சோமண்ணை: மணியத்தானிண்ட கடைக்கு
முன்னாலே கன சனம் நிற்குது. நல்ல வியாபரம்
நடக்குது போலயிருக்கு.

கந்தப்பு: சாமன் வாங்க நிக்கேல்ல!

சோமண்ணை: அப்ப ஏன் நிக்கினம்?

கந்தப்பு: மணியத்தானிட்ட குடுத்த கடனை
வாங்கத்தான்

சோமண்ணை: ?!?!?!?


Counter