Author: Ravi Chellathuray
சோமண்ணை: போன மாதம் உன்ற மகளுக்கு
கல்யாணம் நடந்திருக்கு, எனக்கு சொல்லவேயில்லை!
கந்தப்பு: அவள் எனக்கே சொல்லவில்லையே!
சோமண்ணை: !?!?!?!?
——————————————————————————–
சோமண்ணை: கலியாண மண்டபத்துக்கு
பொம்பிளை ஏன் லேட்?
கந்தப்பு: தலைமுடிக்கு டை போட்டு
முடித்து வர லேட்டா போச்சு!
சோமண்ணை: !?!?!?
——————————————————————————-
சோமண்ணை: சுந்தரத்தான் தன்ற மகன் சிக்ரட் குடிக்கிறான்
என்று கவலைப்பட்டு கதைத்தவன்.
கந்தப்பு: மகன் சிக்ரட் குடிக்கிறதை கண்டால்
தகப்பனுக்கு கவலை தானே வரும்!
சோமண்ணை: சிக்ரட் குடிக்கிறத்துக்கு
கவலைப் படவில்லை! தன்ற சிக்ரட்டை
களவெடுத்து குடிக்கிறான் என்ட கவலையாம்
கந்தப்பு: !?!?!?!?

Author: Ravi Chellathuray
திருக்குறள்
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் (குறள் 926)
உறங்கியவர் இறந்தவரில் வேறுபட்டவர் அல்லர்
அவ்வாறு கள் உண்டு மயங்கியவர் நஞ்சு உண்டவரே
தெருக்குறள்
படுத்தவரும் செத்தவர் போல் கிடப்பார் அது போல்
விஸ்கி, வைன், பியர் அடித்தவரும் விஷம் குடித்தவர் போல் கிடப்பார்
அகதிசூடி
குடியாதான் வாசல் குடித்தொருவன் சென்று குடி கேளாமை கோடி பெரும்
குடி குடித்தவன் குடியையும் கெடுக்கும் குடித்தவனையும் கெடுக்கும்
குடியாதான் பிறரைப்பற்றி கதைப்பான்,
குடித்தவன் தன்னைப் பற்றி, தானே கதைப்பான்
படித்தவன் வீட்டில் புத்தகம் அடுக்கப்பட்டிருக்கும்
குடித்தவன் வீட்டில் புத்தகம் சிதறிக் கிடக்கும்

Author: Ravi Chellathuray

கடனாலே வந்த நட்பு வட்டியாலே போகும்
சீட்டாலே வந்த நட்பு கழிவோடு போகும்
விழாவாலே வந்த நட்பு மொய்யோடு போகும்
ஆலயத்தில் வந்த நட்பு அன்னதானத்தோடு போகும்
குடியாலே வந்த நட்பு வெறியோடு போகும்
கடையாலே வந்த நட்பு கடனாலே போகும்
உறவாலே வந்த நட்பு அலுப்பாலே போகும்
பயணத்தால் வந்த நட்பு பாதியிலே போகும்
இனையத்தில் வந்த நட்பு வைரஸால் போகும்
அறிவிப்பாளரோடு வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்
ரெலிபோனால் வந்த நட்பு கார்ட் வெட்டோடு போகும்
போகும் பொய்யான நட்ப்பெல்லாம் பாதியிலே பொய்யாகி போகும்
———————
நம்பி கெடுப்பவனுடன் நட்பாய் இருப்பதை விட
நம்பாமல் இருப்பவனின் நட்பு மேல்
கட்டின மாடு எட்டும் வரை மேயும்
கட்டாத மாடு ஓயும் வரை மேயும்
இழுக்கும் வரை மேய்வது கட்டின மாடு
இருக்கும் வரை மேய்வது கட்டாமாடு
Author: Ravi Chellathuray



முகத்தாலே வந்த நட்பு முள்போல குத்தும்
அகத்தாலே வந்த நட்பு பூபோல மலரும்
முகத்தாலே வந்த நட்பு வாங்கும் வரை நிற்க்கும்
அகத்தாலே வந்த நட்பு வாழும் வரை தொடரும்
அந்நியரை கண்ட போது நான் அகதி என்கிறான்
நம்மவரை கண்ட போது தான் நஷநாலிற்றி என்கிறான்
சோஸலுக்கு போகும் போது கால் நடையாய் போகின்றான்
கொவிலுக்கு போகும் போது கார்பயணம் செய்கின்றான்
வாழும் நாட்டில் இருந்தால் பிச்சாதிபதி
வாழ்ந்த நாட்டுக்கு போனால் லட்சாதிபதி
Author: Ravi Chellathuray

சோமு: ஊரில கொட்டில் வீட்டில இருந்த சின்னத்துரையன் ஐரோப்பாவுக்கு
வந்து காணி வாங்கி வீடுகட்டி குடி புகுந்திட்டானாம்! கேள்விப்பட்டனியே!
கந்தப்பு: ஓம், ஓம் கேள்விப்பட்டனான், அதோட வேற பிளானும் இருக்காம்.
சோமு: வேற என்ன பிளானாம்?
கந்தப்பு: வாங்கின வழவுக்க கிணறும் வெட்டி, பின் வழவுக்க கக்கூஸ்
கட்ட போறானாம். அதோட வேற பிளானும் ஒண்டு இருக்காம்.
சோமு: அது என்ன வேற பிளான்?
கந்தப்பு: ஊரில் இருந்த பனை ஓலை இறக்கி வழவுக்கு வேலி
அடைக்கப் போறானாம்.
சோமு: பிளான் இல்லாம வெளிகிட்டு இப்ப நல்ல பிளானாத் தான்
இருக்கிறான் எண்டு சொல்லுறாய்.
——————————————————
PLAN போட்டு வாழ்வாரே வாழவார், மற்றெல்லாம்
PLAN இன்றி பின் நின்று கதைப்பார்
கட்டிய வீட்டுக்கு இட்ட பெயர் அன்னை இல்லம்
அன்னை இருக்கும் இடமோ அகதி இல்லம்
Author: Ravi Chellathuray
பாராட்டி பேசுதல் நன்று - பாராட்டியபின்
பாராட்டியவரே பாராட்டியவரை திட்டித்திரிவது நன்றன்று
திட்டித்திரிதல் நன்றன்று திட்டியபின் திட்டியவரே
திட்டியவரோடு சேர்ந்து திரிதல் நன்றன்று
மொய் கொடுத்தல் நன்று - கொடுத்தபின்
மொய்க்காக விழா எடுத்தல் நன்றன்று
கொடுத்தோரை வாழ்த்துவது நன்று
வாங்கியபின் கொடுத்தோரை ஏய்த்து திரிவது நன்றன்று
ஆக்கம் இல்லையேல் நிகழ்ச்சி இல்லை அஃது போல்
ரொக்க இல்லையேல் ஊடகம் இல்லை
படி, படி படிப்பதை படிக்க படித்தபின்
படித்தபடி நடக்க அதற்கு தக
உழைக்க உழைக்க உடல்வலுவுக்கு ஏற்ப உழைக்க - அஃது போல்
செலவு செய்க வரவுக்கு ஏற்ப்ப
வரவுக்கு ஏற்ற வாழ்கை வாழ்வாரே வாழ்வார் அஃதிலார்
வரவிழந்து மனம் நொந்து வீழ்வார்
Author: Ravi Chellathuray
சோமண்ணை: ஒழுங்காய் நடக்கிற பள்ளிக்கூடம்
கோவில் மன்றங்களை பிரிச்சுப்போட்டு சிரிச்சிக்-
கொண்டு திரிஞ்சவங்கள் இப்ப ஏன் கவலையால்
அழுதுகொண்டு திரியுறாங்கள்?
கந்தப்பு: பிரிஞ்சதெல்லாம் ஒன்று சேர்ந்திடுமோ
என்ட பயத்தில் தான்!
சோமண்ணை:?!?!?!?
———————————————————————————————————————————————————————-
சோமண்ணை: மணியத்தானிண்ட கடைக்கு
முன்னாலே
கன சனம் நிற்குது. நல்ல வியாபரம்
நடக்குது போலயிருக்கு.
கந்தப்பு: சாமன் வாங்க நிக்கேல்ல!
சோமண்ணை: அப்ப ஏன் நிக்கினம்?
கந்தப்பு: மணியத்தானிட்ட குடுத்த கடனை
வாங்கத்தான்
சோமண்ணை: ?!?!?!?
Author: Ravi Chellathuray
கந்தப்பு: ஐரோப்பிய நாட்டில் வாழும் எங்கட பெண்டுகள் இப்ப தங்கட இனத்தவரை கண்டால் கை எடுத்து கும்பிட்டு அதோட கை குலுக்கிதான் வரவேற்கினமாம்.
சோமண்ணை: தமிழ்கலாச்சாரமும் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் கடைப்பிடிக்கினம் எண்டு சொல்லுங்கோ !
கந்தப்பு: கலாச்சாரம் கிலாச்சாரம் கலக்கவில்லை. கையெடுத்து கும்பிட்டால் இரண்டு கையிலும் எத்தினை தங்க காப்பு இருக்கு எண்டு தெரியும் கைகுலுக்கினால் எவ்வளவு வெயிற் எண்டு கைகுடுக்கிறவருக்கு புரியும். இது தான் கும்பிட்டு குலுக்கிற சமாச்சாரம்.