Author: Ravi Chellathuray
கஷ்டத்தில் இருப்பவன் ஜோசியர் வீட்டை விட்டு வரமாட்டான் செல்வந்தன் மருந்து கடையை விட்டு வரமாட்டான்
உலகை பற்றிய அறிவை உலகை சுற்றிப்பார்த்து அறிந்தது அந்தகாலம் அது கற்காலம்
உலகை பற்றிய அறிவை அறையில் இருந்தபடியே அறிவது இந்தகாலம் இது கணணிக்காலம்
வாழ்வின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதில் கழிகின்றது,
வாழ்வின் இரண்டாம் பகுதி முற்பகுதிக்காக வருந்துவதில் கழிகின்றது
சிந்தனை அற்ற மனிநர்களை பழக்கமே ஆள்கிறது
பெரியமனிதர்களுக்கு நண்பர்களை விட போற்றுவோரே அதிகமிருப்பர்
நதிகளின் பெருமை கடல் வரைதான்
கொடுத்தவனின் பெருமை கொடுத்ததை கேட்கும் வரைதான்
இனிமையாக பேசினாலும் உண்மையின்றி பேச வேண்டாம்
உண்மையாக பேசினாலும் இனிமையின்றி பேச வேண்டாம் 
Author: Ravi Chellathuray

மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
காலை, மாலை ஓடி, ஓடி வேலை செய்ய போதிலும்
மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
கடன் வாங்கி வட்டிகட்டி வாழுகின்ற போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
சோசலிலே காசெடுத்து வேலை செய்த போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
சீட்டெடுத்து வட்டிவாங்கி சேர்த்துவிட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
மொய் எடுக்க விழாவெடுத்து மொய் சேர்த்த போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
நாடுவிட்டு நாடு மாறி திரிகின்ற போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
சின்னத்திரை நாடகங்கள் இலவசமாய் பார்த்துவிட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
கோவில்குளம் அன்னதானம் உண்டு வந்த போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
கடைகள் போட்டு குடும்பமாக நடர்த்தி வந்த போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
நல்ல நண்பர் என்று சொல்லி கூடித்திரிந்த போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
இலவசமாய் சின்னத்திரை, சஞ்சிகள் வானலைகள் பார்த்து கேட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
சேல்ஸ் போட்ட கடைதனிலே சாமன் வாங்கி சேர்த்து விட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
வான் அலையில் வந்து வந்து கருத்து கேட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
கடன் எடுத்து வீடு கட்டி கார் வாங்கி வாழ்ந்து விட்ட போதிலும் மிச்சமில்லை மிச்சமில்லை மிச்சம்என்பதில்லையே
Author: Ravi Chellathuray

கந்தப்பு: சுந்தரதானின்ட மனிசிக்கு, இப்பவே தலைமயிர் எல்லாம் நரைச்சு
போச்சு டை அடிச்சால் இளமையாய் தெரியும்தானே.
சோமண்ணை: டை அடிக்கிறது சுந்தரத்தானுக்கு விருப்பமில்லையாம்!
கந்தப்பு: ஏன் செலவாமோ?
சோமண்ணை: செலவும் தான், அதோட டை அடிச்ச மனிசியோட
போகேக்க தன்னை கிழவன் மாதிரி காட்டுமாம்
கந்தப்பு:!?!?!?
Author: Ravi Chellathuray

அரும்புகள் எல்லாம் பூக்கள் விற்பதால் மல்லிகைபூவிலும் வியர்வை வாசம்
பிஞ்சு விரல்கள் பிழிந்ததனாலே கசப்பாய் இருக்கிறது கரும்புச்சாறு
கடற்கரை அலையை ரசிக்கமுடியவில்லை, நொண்டிச்சிறுவன் சுண்டல் விற்கயிலே
பெற்றோர் இருவரும் வேலைக்கு போக வாடகைத்தாய்யாக
9 வயதுச்சிறுமி
வாடாத கீரையை வாடிய முகத்தோடு விற்கிறால் சிறுமி, வாங்கிச்சமைத்தபின் உப்பின் கரிப்பு உறைப்பாய் எனக்கு
அப்பா வாங்கியது அதிகவிலை: அக்காவின் கணவன்
வாகனம் ஓட்டும் போது கைதொலைபேசி ஒலித்தால் எடுத்துப்பேசாதீர்கள், அலைப்பது எமனாகக்கூட இருக்கலாம்.
கடல் அலையை ரசிக்கமுடியவில்லை, சுனாமிப்பேரலை வந்து போன பின்னால்

Author: Ravi Chellathuray
ஓளவையின் பாடல்
ஆலைப் பலா ஆக்கலாமோ?
அருஞ்சுணங்கள் வாலை நிமிர்க்க வசமோ?
நீலநிறக் காக்கைதனை பேசுவிக்கலாமோ
கருனையிலா மூர்க்கனை சீராக்கலாமோ?
அகதியாரின் பாடல்
வட்டியில்லா கடன் எடுக்க முடியுமோ?
கழிவில்லா சீட்டுப்பிடிக்க முடியுமோ?
மொய் கொடுக்கா விழா காண முடியுமோ?
குழப்பமில்லா விழா பார்க்க முடியுமோ?
நாடகமில்லா சின்னத்திரை இருக்க முடியுமோ?
சினிமாபாடல் இல்லா வானொலி கேட்க முடியுமோ?
ரொக்கம் இல்லா ஊடகம் தொடர முடியுமோ?
அன்னதானம் இல்லா ஆலயத்தில் பக்த்தரை காணத்தான் முடியுமோ?
கடன் கொடுக்கமால் கடை நடாத்த முடியுமோ?
கோலா கலக்கா விஸ்கி குடிக்கத்தான் முடியுமோ?
குறை கூறா உறவை தேடத்தான் முடியுமோ?
நம்பிக் கெடுக்கா நட்பை தேடத்தான் முடியுமோ?
நகை போடா பெண்ணை காணத்தான் முடியுமோ?
இரண்டு வேலை செய்யா எம்மவரை தேடத்தான் முடியுமோ?
எம்மவர் ஆக்கத்தை விலைக்கு விற்க்கத்தான் முடியுமோ?
புலம் பெயரா தமிழ்ர் இருக்கத்தான் முடியுமோ?
நம்மினத்தார் ஒற்றுமையாய் வாழத்தான் முடியுமோ?
அலுப்புத்தராத மனைவி அமையத்தான் முடியுமோ?
தன் பிள்ளையை புழுகாத தாயைத்தான் காணமுடியுமோ?
முடியுமோ முடியுமோ எமக்கு இவையெல்லாம் புலம்பெயர்வில்
முடியுமோ முடியுமோ முடியுமோ?
Author: Ravi Chellathuray
(தி.மு) திருமணத்திற்கு முன்
(நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)
கீழே படியுங்கள்
அவன் : ஆமாம்இ இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.
அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?
அவன் : இல்லைஇ இல்லைஇ நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?
அவன் : ஆமாம்இ இன்றும்இ என்றென்றும்
அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?
அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்
அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?
அவன் : கண்டிப்பாகஇ அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
அவள் : என்னை திட்டுவாயா ?
அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா
அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?
(தி.பி) திருமணத்திற்குப் பின்
கீழிருந்து மேலே படியுங்கள்

Author: Ravi Chellathuray
எதிரி நண்பன் ஆனால் ஆபத்து
நண்பன் எதிரி ஆனால் பேராபத்து
நல்ல நட்பு தூர இருந்தாலும் கிட்ட இருப்பது போல் இருக்கும்
கெட்ட நட்பு கிட்ட இருந்தாலும் தூர இருப்பது போல் இருக்கும்
வேலையின்றி வாழ்ந்த போது சேர்ந்த நட்பு
வேலை கிடைத்தபின் சோர்ந்த நட்பு
சொல்பவர்கள் எல்லாம், செய்பவர்கள் அல்ல
செய்பவர்கள் எல்லாம் சொல்பவர்கள் அல்ல.
சொல்லி விட்டு சொல்லவில்லை எனபவர்கள் நல்லவர்கள் அல்ல
Author: Ravi Chellathuray

நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..
இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா???…
இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா???
——————————————————————————————————————–
நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில வடைய சுட்டது
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???
உடனடியா பதில்
தேவை……!!!!
——————————————————————————————————————–
ஒன்றுமே தெரியாத student கிட்ட question paper கொடுக்குறாங்க….
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட answer paper கொடுக்குறாங்க…
என்ன கொடும சார் இது????….
——————————————————————————————————————–
ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப்
புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது…
——————————————————————————————————————–
ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.
பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க சார்.
ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான் ஐயா.
——————————————————————————————————————–
நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…
சொல்லட்டுமா????
ஆ..சொல்லட்டுமா????
பக்கத்து “பெருமாள் கோவில்”ல சுண்டல் போடுறாங்க…
ஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க?….
